test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, 22 July 2017

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்லைகா நிறுவனம் தயாரிக்கிறது.


ஷங்கர் - ரஜினி இணையும் '2.0' மற்றும் விஜய் இயக்கத்தில் 'கரு' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார்கள்.

தற்போது புதுமுக இயக்குநர் திலீப்குமார் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இக்கதை முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையாகும். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'கோ கோ' என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot