test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீது புகார்

நடிகர் தாடி பாலாஜி மீது கமிஷனர் அலுவலகத்தில் மனைவி புகார்.


சென்னை:

சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜிதனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்புநித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளார்.

தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதுஇந்நிலையில்நித்யா கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.

கணவர் பாலாஜிதன்னை சாதி பெயர் சொல்லி திட்டுவதாகவும்அடித்து உதைப்பதாகவும் என்னை அவர் சந்தேகிக்கிறார் என்றும் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நித்யா இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு  சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நித்யாகணவர் பாலாஜி மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 45 நாட்களுக்குமேல் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைஎனவேஇது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

பாலாஜி குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும்தன்மீது சந்தேகப்படுவதாகவும் நித்யா கூறினார்பலபேருடன் என்னை தொடர்புபடுத்தி பேசி என்னை சித்ரவதை செய்து வருகிறார்.

நான் 4, 5 நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன்நான் வேலை செய்யும் இடங்களுக்கே வந்து வாசலில் நின்று அசிங்கப்படுத்தி வருகிறார்.

குடித்து விட்டு என்னை அடித்து உதைப்பார்பாலாஜிமீடியா என்ற போர்வையை போர்த்திக் கொண்டு எனக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்து வருகிறார்


மாதவரம் காவல் நிலையத்தில் நான் மே மாதம் 23 ஆம் தேதி பாலாஜி மீது புகார் மனு அளித்திருந்தேன்அது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைமேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேநான் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன் என்று நித்யா கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot